" குழந்தைகளுக்கான கோடைகால கொண்டாட்டம் -2 "

*வானகத்தில் " குழந்தைகளுக்கான கோடைகால கொண்டாட்டம் -2 *"
#நாள் : 18-5-25 முதல் 25-5-25 வரை
மழலைகள் இயற்கையோடு இணைந்த வாழ்வியலில் கலந்து களித்திட.. வான் பார்த்தல்... வனம் பார்த்தல்... நீர் பார்த்தல்... நிலம் பார்த்தல்... செடி வளர்த்தல் , மரம் அறிதல், பொம்மைகள் செய்தல் , கதை சொல்லிகளோடு கதையாடல் , மரபு விளையாட்டுகளை விளையாடி மகிழ்தல் , பனையோலை மடிப்பு கலை செய்தல் , மரபு கலைகளான சிலம்பம் சுத்துதல் பறையிசைத்தல், குழந்தைகளுக்கான திரைப்பட திரையிடல் , கூத்து நாடகம் நடித்தல் , இயற்கை உணவுகளோடு அதன் உன்னதத்தை உணர்தல் ரசித்தல் என மழலைகள் தங்களின் விடுதலையை உணர்ந்திடவும் தன்னியல்போடு கொண்டாடிடவும் கூடிடுவோம்..
கடந்த வருடம் நடந்த பயிற்சியின் நிகழ்வைக் காண :
https://youtu.be/KhBLk0Z69hU?si=btBSO9-YdckgNTmS
https://youtu.be/Ka0IXONU4EM?si=mecPau1K8tnb5Tu6
https://youtu.be/iGYwVRR_B7M?si=TCwhI3snZujJ5pxv
https://youtu.be/65LyXTK03D4?si=-hY-s8xRhVdyVUOj
பயிற்சி நடைபெறும் இடம் :
வானகம், நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்,
சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் .
பயிற்சிக் பங்களிப்பு : ரூ.4,000 -
( எளிமையான தங்குமிடம் & சத்துமிகு இயற்கை உணவுகள் உட்பட )
#8 வயது முதல் 14 வயது குழந்தைகள் மட்டும்.
#பெற்றோர்கள் உடன் தங்க அனுமதி இல்லை.
#முன்பதிவு :
+91 94458 79292
+91 86680 98495
+91 93855 92292
பயிற்சிக்கு வரும்போது புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வரவும் .
நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள்
Nammalvar Ecological Foundation :
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu
(வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
பணம் செலுத்தியவுடன் தங்கள் முகவரி மற்றும் பணம் செலுத்திய விபரத்தை 94458 79292இந்த கைபேசிக்கு whatsappல் அனுப்பவும்.
நிகழ்ச்சியில் :
நாட்டுப்புற கலை பழகுதல்,
இயற்கை வண்ண ஓவியம், தேங்காய் ஓடு கைவினை பயிற்சி, காகித மடிப்புக் கலை,
இயற்கை வழி வேளாண்மை , வீட்டுத்தோட்டம், மரபு விளையாட்டுகளுடன் கூடிய நாடக பயிற்சி, சிலம்பம், ஒயில் , யோகா, மற்றும் இயற்கையின் நுண்ணுணர்வை நோக்கிய கலந்துரையாடல்களும் , அறிவியல் அறிதல் செய்முறைப் பயிற்சியும் நடைபெறும்.
வெறும் நகரச் சூழலின் சத்தங்களையே கேட்டு வளர்ந்த நம் குழந்தைகளை சிலம்பின் வீச்சும், சலங்கையின் வெண்கல ஒலியும், ஒயிலாட்டம் மற்றும் பறையின் அதிர்வும், கரகத்தின் மெல் அசைவும் இப்பிரபஞ்சத்தின் சுயமான அக மன கொண்டாட்டத்தை நோக்கி கட்டாயம் கைபிடித்து கூட்டிச்செல்லும் அதன் கதகதப்பில் நம்மாழ்வார் அய்யாவின் இருப்பை அனைவரிடத்திலும் உணரலாம்.
குறிப்பு :
- வெளியிலிருந்து கொண்டுவரும் உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
- பாலித்தின் பைகள்
- சோப்பு
- ஷாம்பு
- பேஸ்ட்
- கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ ,
வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.
நன்றி.
வானகம் குறித்த மேலும் விவரங்களுக்கு :
https://vanagam.org